இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (செப்டம்பர் 8) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "சேலத்தில் புதிதாக இரண்டு கரோனா வைரஸ் பரிசோதனை மையங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 163ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 81 ஆயிரத்து 66 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டில் இருந்து 5 ஆயிரத்து 682 நபர்களுக்கும், மேற்கு வங்கம், கர்நாடகாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என 5 ஆயிரத்து 684 நபர்களுக்கு வைரஸ் தொற்று மேலும் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 52 லட்சத்து 85 ஆயிரத்து 823 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 லட்சத்து 74 ஆயிரத்து 940 நபர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 50 ஆயிரத்து 213 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் குணமடைந்த 6 ஆயிரத்து 599 பேர் இன்று சிகிச்சை முடிவடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்து 715ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி 43 பேர் தனியார் மருத்துவமனையிலும் 44 பேர் அரசு மருத்துவமனையிலும் என மொத்தமாக 87 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 12ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு
- சென்னை -1,43,602
- செங்கல்பட்டு - 28,994
- திருவள்ளூர் - 26,841
- கோயம்புத்தூர் -19,948
- காஞ்சிபுரம் - 18,628
- மதுரை - 14,988
- கடலூர் - 14,865
- விருதுநகர் - 13458
- தேனி - 13338
- சேலம் - 13,005
- திருவண்ணாமலை - 12,211
- தூத்துக்குடி - 11894
- வேலூர் - 11949
- ராணிப்பேட்டை - 11567
- திருநெல்வேலி - 10523
- கன்னியாகுமரி - 10404
- விழுப்புரம் - 8660
- திருச்சிராப்பள்ளி - 8336
- தஞ்சாவூர் - 7691
- திண்டுக்கல் - 7501
- கள்ளக்குறிச்சி - 7292
- புதுக்கோட்டை - 6886
- தென்காசி - 5959
- ராமநாதபுரம் - 5039
- திருவாரூர் - 4560
- சிவகங்கை- 4345
- ஈரோடு - 4082
- திருப்பூர் - 3792
- நாகப்பட்டினம் - 3413
- திருப்பத்தூர் - 3339
- அரியலூர் - 3148
- நாமக்கல் - 2795
- கிருஷ்ணகிரி - 2715
- நீலகிரி - 1989
- கரூர் - 1948
- தருமபுரி - 1560
- பெரம்பலூர் - 1446
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 922
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 879
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க:கூட்டத்தொடருக்கு வரும் உறுப்பினர்களுக்கு கட்டாயம் பரிசோதனை - பேரவைத் தலைவர் தனபால்