தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தை இல்லாத காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட தம்பதி - காவல்துறை விசாரணை

சென்னை: கொரட்டூரில் குழந்தையில்லாத காரணத்தால் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

couple-committed-suicide-due-to-childlessness-police-investigation
couple-committed-suicide-due-to-childlessness-police-investigation

By

Published : Mar 13, 2020, 10:57 PM IST

சென்னை பாடி குமரன் நகரில் வசித்துவந்தவர்கள் சந்திரசேகர்(46), மஞ்சுளா(36) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையிலும் குழந்தை இலலாத காரணத்தால், சில நாட்களாக மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்களது வீடு கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்படாமலும், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாலும் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், காவல் நிலையத்தில் புகாரளித்தனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஹாலில் இருந்த ஃபேனில் ஒரே புடவையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

குழந்தை இல்லாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர்

பின் இருவரது உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறாய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருவரும் குழந்தை இல்லாத காரணத்தால் தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ரூ 300க்கு போலி ரேஷன் கார்டு விற்பனை - கணினி மைய உரிமையாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details