தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வட சென்னையை சேர்ந்த நான்கு பேருக்கு கரோனா! - சென்னையை சேர்ந்த நான்கு பேருக்கு கரோனா

சென்னை: டெல்லி இஸ்லாமிய மத போதக மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாடு திரும்பிய வடசென்னையை சேர்ந்த நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona
corona

By

Published : Apr 3, 2020, 1:05 PM IST

மார்ச் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மத போதக மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் தென்னிந்தியாவிலிருந்து கலந்துகொண்டவர்கள் 1500 பேர் என்றும், அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆயிரத்து 131 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மாநாடு ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் விமான நிலையங்கன், ரயில் நிலையங்களில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 515 பேர் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில், 80 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 600 பேரை தமிழ்நாடு காவல்துறை உதவியுடன் தேடி வருவதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறையினர் மாவட்ட வாரியாக மாநாட்டில் கலந்துகொண்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பிட்ட முகவரியில் சம்பந்தப்பட்ட நபர்கள் இல்லை என்றால், நுண்ணறிவு பிரிவு மற்றும் கியூ பிரிவு காவலர்களை பயன்படுத்தி அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னையை பொறுத்தமட்டில் 75 பேர் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த 31ஆம் தேதி டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டதாக கூறி வடசென்னை தண்டையார்பேட்டை, கொருக்குபேட்டை பகுதியை சேர்ந்த நான்கு பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தாமாக முன்வந்து சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு இவர்கள் 4 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இவர்கள் வசித்து வந்த தெரு முழுவதிலும் ஆர்.கே.நகர் காவல்துறையினர், இரும்பு தடுப்புகள் அமைத்து பொதுமக்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் வடசென்னையில் கரோனா தொற்று பரவாது என அங்கு வசிக்கும் பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மகாராஷ்டிராவிலிருந்து நடந்து வந்த தமிழ்நாடு இளைஞர் தெலங்கானாவில் மாரடைப்பால் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details