கரோனா பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு இணையாக, தமிழ்நாட்டிலும் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "(09.05.2020) நேற்று வரை ஆறாயிரத்து ஒன்பதாக இருந்த கரோனா பாதிப்பாளர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 535ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 526 பேரில், அதிகபட்சமாக சென்னையில் 279 பேரும், விழுப்புரத்தில் 67 பேரும், செங்கல்பட்டில் 40 பேரும் கரோனாவால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.