தமிழ்நாடு

tamil nadu

கரோனாவால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் தூக்கிட்டுத் தற்கொலை

By

Published : May 26, 2020, 2:18 PM IST

சென்னை: கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

corona-virus-patient-commits-suicide
corona-virus-patient-commits-suicide

சென்னை மாதூர் எம்.எம்.டி.ஏ. பகுதியைச் சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவர் நேற்று (மே 25) கரோனா தீநுண்மி பதிப்பு உறுதிசெய்யப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கரோனா சிகிச்சை வார்டில் மன உளைச்சலிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று அவர் வார்டில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் வெளியே வராததால் பிற நோயாளிகள் மருத்துவமனை காவலாளியிடம் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து கழிவறையின் கதவைக் காவலாளிகள் உடைத்துப் பார்த்தபோது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அதையடுத்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க:வடமாநிலத் தொழிலாளி தொழிற்சாலையில் தூக்கிட்டுத் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details