தமிழ்நாடு

tamil nadu

ஒரே நாளில் ஆயிரத்தை தொட்ட கரோனா பாதிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 1149 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

By

Published : May 31, 2020, 8:21 PM IST

Published : May 31, 2020, 8:21 PM IST

cm palanisamy
cm palanisamy

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள 72 ஆய்வகங்களில் 12 ஆயிரத்து 807 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், முதல் முறையாக ஆயிரத்து 149 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்த 1054 நபர்களுக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 95 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் இன்று 757 பேர் உள்பட 12,757 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தும் முகாம்களில் 6 ஆயிரத்து 710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 13 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 173ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 804 பேருக்கும், செங்கல்பட்டில் 85 பேருக்கும், திருவள்ளூரில் 45 பேருக்கும், திருவண்ணாமலையில் 45 பேருக்கும் என 22 மாவட்டங்களில் நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு விவரம்

வரிசை எண் மாவட்டங்கள் பாதிப்பு எண்ணிக்கை
1 சென்னை 14,802
2 செங்கல்பட்டு 1,177
3 திருவள்ளூர் 948
4 கடலூர் 461
5 திருவண்ணாமலை 419
6 காஞ்சிபுரம் 407
7 அரியலூர் 365
8 திருநெல்வேலி 352
9 விழுப்புரம் 346
10 மதுரை 269
11 கள்ளக்குறிச்சி 246
12 தூத்துக்குடி 226
13 சேலம் 176
14 கோயம்புத்தூர் 146
15 பெரம்பலூர் 141
16 திண்டுக்கல் 139
17 விருதுநகர் 123
18 திருப்பூர் 114
19 தேனி 109
20 ராணிப்பேட்டை 98
21 தஞ்சாவூர் 89
22 திருச்சி 88
23 தென்காசி 86
24 ராமநாதபுரம் 84
25 கரூர் 81
26 நாமக்கல் 78
27 ஈரோடு 71
28 கன்னியாகுமரி 67
29 நாகப்பட்டினம் 60
30 திருவாரூர் 47
31 வேலூர் 43
32 சிவகங்கை 33
33 திருப்பத்தூர் 32
34 கிருஷ்ணகிரி 28
35 புதுக்கோட்டை 26
36 நீலகிரி 14
37 தருமபுரி 8


மேலும், விமானங்கள் மூலம் வருகை தந்த இரண்டாயிரத்து 731 பயணிகளில் இரண்டாயிரத்து 703 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மே 29, 30 ஆகிய தேதிகளில் விமானங்கள் மூலம் வந்த 311 நபர்களின் பரிசோதனை ஆய்வகத்தில் நடைபெற்று வருகின்றன. இரண்டாயிரத்து 351 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ரயில்களின் மூலம் வந்த 10 ஆயிரத்து 232 பயணிகளில் 9 ஆயிரத்து 607 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் தேதி முதல் வருகை தந்த பயணிகள் ஆயிரத்து 815 பேர் பரிசோதனை ஆய்வகத்தில் உள்ளனர். ரயிலில் வந்த 221 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் 158 உள்நாட்டு விமானங்கள் மூலம் தமிழ்நாடு வந்த 9 ஆயிரத்து 927 நபர்களில் 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விமானம், ரயில், சொந்த வாகனம், பேருந்து என தமிழ்நாட்டிற்கு வந்த 99 ஆயிரத்து 651 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 570 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details