தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிவாரணத் தொகை 222 திருநங்கைகளுக்கு வழங்கல்

சென்னை: ஆவடியில் மூன்றாம் பாலினத்தவருக்கான கரோனா நிவாரண தொகை 2000 ரூபாயை முதல்கட்டமாக 222 திருநங்கைகளுக்கு தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்.

By

Published : Jun 11, 2021, 1:59 AM IST

கரோனா நிவாரணத் தொகை 222 திருநங்கைகளுக்கு வழங்கல்
கரோனா நிவாரணத் தொகை 222 திருநங்கைகளுக்கு வழங்கல்

ஊராடங்கால் வாழ்வாதாரம் இழந்த குடும்ப அடையாள அட்டையுள்ள திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

பின்னர் குடும்ப அடையாள அட்டை இல்லாத திருநங்கைகளுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட சமூக நலத் துறை சார்பில் அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு அமைச்சர் சா.மு. நாசர் பங்கேற்று 222 திருநங்கைகளுக்கு உதவித் தொகையினை வழங்கினார்.

தொடர்ந்து சத்யவாணி முத்து திட்டத்தின்கீழ் 125 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ் மாவட்டத்தின் 11 நபர்களுக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நாசர், "திருநங்கைகள் என மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பெயரை மாற்றி அதனை அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

அதனையும் மிஞ்சும் வகையில் தற்போதுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கான நிதி உதவியினை வழங்கி அவர்களின் முன்னற்றத்திற்கு உறுதுணையாக இருந்துவருகிறார்.

இனிவரும் காலங்களில் தற்போதுள்ள அரசு மூன்றாம் பாலினத்தவர்களின் நலனை உயர்த்தும் வகையில் செயல்படும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து திருநங்கைகள் கோரிக்கையை ஏற்று உடனடியாக குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும் அமைச்சர் நாசர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details