தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் அலுவலகத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று! - chief minister edappadi palaniswamy

சென்னை: முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் துணைச் செயலர் உட்பட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Breaking News

By

Published : Jun 18, 2020, 11:16 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் துணைச் செயலர், 2 அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர் என நால்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் தான், கரோனா தொற்று பாதிப்பால், முதலமைச்சரின் அலுவலகத் தனிச் செயலாளர் தாமோதரன் மறைந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details