தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சானிடைசர் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை - இரண்டு பேர் கைது - கூடுதல் விலைக்கு சானிடைசர் விற்பனை

சென்னை: சானிடைசரை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Corona mask ceased
Corona mask ceased

By

Published : Mar 28, 2020, 3:48 PM IST

கரோனா வைரஸ் தமிழ்நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் அவற்றை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக கரோனா நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க சானிடைசரை உபயோகித்து வருகின்றனர்.

இதனால் மருந்துக் கடைகளில் சானிடைசரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. அதனடிப்படையில் பதுக்கி வைத்தாலோ, கூடுதல் விலைக்கு முகக்கவசம், கிருமி நாசினி மருந்துகளை விற்றாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினர் மருந்துக் கடைகளில் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு குடோனில் சானிடைசரை பதுக்கி வைத்து ஆன்லைனில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாநகராட்சி அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் கோடம்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட இருவர்

சோதனையில், சுமார் 1500 சானிடைசர் பாட்டில்கள், முகக்கவசங்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த முகமது நிசாம்(30), கார்த்திகேயன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:கரோனாவிற்கு கேரளாவில் முதல் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details