தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 12, 2020, 3:36 PM IST

ETV Bharat / state

ஆவடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா!

சென்னை: ஆவடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

chennai aavadi
chennai aavadi

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழ்நா்டடில் இதுவரை 969 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் இறந்துள்ளனர். 44 பேர் குணமடைந்துள்ளனர். வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றால் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் என மூன்று பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆவடி குடியிருப்புப் பகுதியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தாலும், அப்பகுதி மக்கள் கூட்டமாக சுற்றித் திரிவது சமூகவிலகலை கேலிக்கூத்தாகி உள்ளது. இதனால், மக்களை கட்டுப்படுத்த முடியாமல் அலுவலர்கள் திணறி வருகின்றனர்.

இதையும் படிங்க:வெளி மாநில தொழிலாளர்களுக்கு துணை நிற்போம்- திமுக தலைவர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details