தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 15, 2021, 2:47 PM IST

ETV Bharat / state

கரோனா தாக்கம்: சென்னையில் 36 விமானங்கள் ஒரே நாளில் ரத்து!

சென்னை: கரோனா தொற்று பரவல் காரணமாக விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 36 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

flight
flight

கரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் சென்னை விமான நிலையம் தொடர்ந்து பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாக 18 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை இன்று (ஏப்ரல் 15) இரு மடங்காக அதிகரித்து 36 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் பெங்களூரு விமானங்கள் 4, டெல்லி விமானங்கள் 3, மும்பை விமானங்கள் 3, இந்தூா் விமானங்கள் 2, ஹைதராபாத் 1, நாக்பூா் 1, புனே 1, சூரத் 1, மங்களூர் 1, அந்தமான் 1 ஆகிய 18 விமானங்களும், அதைப்போல் அந்தந்த இடங்களிலிருந்து சென்னைக்கு திரும்பி வரும் 18 விமானங்களும் என மொத்தம் 36 விமானங்கள் இன்று (ஏப்ரல் 15) ஒரே நாளில் ரத்து ஆகியுள்ளன.

இன்று (ஏப்ரல் 15) சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை விமானங்கள் 112, புறப்பாடு விமானங்கள் 109 என்ற எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. அவைகளிலும் மிகவும் குறைந்த அளவு பயணிகளே பயணிக்கின்றனா்.

ABOUT THE AUTHOR

...view details