இது குறித்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது.
இத்தகைய ஒரு அசாதாரணமான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 12 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, அனைத்து பணியாளர்களின் மொத்த ஒருநாள் ஊதியமான 150 கோடி ரூபாயை கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசிற்கு வழங்க முடிவு செய்துள்ளது.