சென்னை: தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கரோனா குறித்த புள்ளி விவர தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 303 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,608 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன.
இதுவரை 4 கோடியே 33 லட்சத்து 22 ஆயிரத்து 131 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 26 லட்சத்து 33 ஆயிரத்து 839 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில், 16 ஆயிரத்து 473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 1,512 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 82 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் 22 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,46,253
கோயம்புத்தூர் - 2,38,766
செங்கல்பட்டு - 1,66,711
திருவள்ளூர் - 1,16,595
சேலம் - 96,839
திருப்பூர் - 91,371
ஈரோடு - 99,842
மதுரை - 74,182
காஞ்சிபுரம் - 73,250
திருச்சிராப்பள்ளி - 75,012
தஞ்சாவூர் -71,896
கன்னியாகுமரி - 61,277
கடலூர் - 62,755
தூத்துக்குடி - 55,615
திருநெல்வேலி - 48,578
திருவண்ணாமலை - 53,756
வேலூர் - 49,044
விருதுநகர் - 45,839
தேனி - 43,279