சென்னையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,576இல் இருந்து 11,125ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று கரோனாவால் ஏழு பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 16,277இல் இருந்து 17,082ஆக அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது, களப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கரோனா நோயை விரைந்து கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.