தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா உறுதி ! - Corona confirms to Koyambedu Sub Inspector

சென்னை: கோயம்பேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona  காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா உறுதி !  கோயம்பேடு கரோனா உறுதி  கோயம்பேடு சப் இன்ஸ்பெக்டர் கரோனா உறுதி  Corona confirms to Sub Inspector  Corona confirms to Koyambedu Sub Inspector  Corona confirms
Corona confirms

By

Published : Apr 30, 2020, 3:29 PM IST

உலகை அச்சுறுத்திவரும் கரோனா தொற்று பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை எளிதில் தாக்கி அவர்களை உயிரிழக்க செய்கிறது. இதனால், காவல் துறையில் 50 வயதிற்கு மேல் பணிபுரியும் காவலர்களை கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தக்கூடாது என காவல் துறைத் தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கோயம்பேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு வயது 50-க்கு மேல் உள்ளதால் 144 தடை உத்தரவை மீறிச் சென்ற நபர்களின் பட்டியலை தயாரிக்கும் பணிகளில் காவல் நிலையத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே, கோயம்பேடு மார்க்கெட்டில் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் முகாமில் உதவி ஆய்வாளர் பரிசோதனை செய்துவந்துள்ளார். இந்நிலையில், இன்று அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கரோனா உறுதி

இதனால், அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் கோயம்பேடு காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அவருடன் பணிபுரிந்த காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஊரடங்கு மீறல்: தமிழ்நாடு முழுவதும் 3,65,747 வாகனங்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details