மக்கள் நல்வாழ்வு துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில், புதிதாக 52 ஆயிரத்து 276 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 503 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில், இதுவரை ஒரு கோடியே 55 லட்சத்து 49 ஆயிரத்து 828 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 8 லட்சத்து 36 ஆயிரத்து 818 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியவந்தது. அவர்களில், தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், பூரண குணமடைந்த 544 பேர் இன்று (ஜன.28) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 19 ஆயிரத்து 850 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகளும், தனியார் மருத்துவ மனையில் 3 நோயாளிகளும் என 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 2 லட்சத்து 30 ஆயிரத்து 834 பேர்
கோயம்புத்தூர்- 54 ஆயிரத்து 225 பேர்
செங்கல்பட்டு - 51 ஆயிரத்து 409 பேர்
திருவள்ளூர் - 43 ஆயிரத்து 486 பேர்
சேலம்- 32 ஆயிரத்து 363 பேர்
காஞ்சிபுரம் - 29 ஆயிரத்து 221 பேர்
கடலூர் - 24 ஆயிரத்து 910 பேர்
மதுரை - 20 ஆயிரத்து 966 பேர்
வேலூர்- 20 ஆயிரத்து 694 பேர்
திருவண்ணாமலை- 19 ஆயிரத்து 346 பேர்
தேனி- 17 ஆயிரத்து 67 பேர்
தஞ்சாவூர் - 17 ஆயிரத்து 642 பேர்
திருப்பூர்- 17 ஆயிரத்து 829 பேர்
விருதுநகர்- 16 ஆயிரத்து 549 பேர்
கன்னியாகுமரி - 16 ஆயிரத்து 791 பேர்
தூத்துக்குடி - 16 ஆயிரத்து 270 பேர்
ராணிப்பேட்டை - 16 ஆயிரத்து 107 பேர்