தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே 4) வெளியிட்ட புள்ளிவிவர தகவலின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் ஆய்வகம் ஒன்றில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 266ஆக அதிகரித்துள்ளது.
மேலும் புதிதாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 141 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 34 நபர்கள் உட்பட 21 ஆயிரத்து 228 நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 992 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் 12 லட்சத்து 49 ஆயிரத்து 292 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தல் மையங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 19 ஆயிரத்து 112 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 9 ஆயிரத்து 450ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 144 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 612ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு :
சென்னை - 3,58,573
செங்கல்பட்டு - 86,265
கோயம்புத்தூர் - 84,206
திருவள்ளூர் - 63,618
சேலம் - 43,800
காஞ்சிபுரம் - 40,163
கடலூர் - 31,525
மதுரை - 33,669
வேலூர் - 28,534
தஞ்சாவூர் - 27,059
திருவண்ணாமலை - 24,650
திருப்பூர் - 28,213
கன்னியாகுமரி - 23,125
திருச்சிராப்பள்ளி - 25,495
தூத்துக்குடி - 25,796
திருநெல்வேலி - 27,129
தேனி - 21,385
விருதுநகர் - 21,023
ராணிப்பேட்டை - 22,461
விழுப்புரம் - 20,239
ஈரோடு - 23,388
நாமக்கல் - 17,232
திருவாரூர் - 15,904
திண்டுக்கல் -16,648
புதுக்கோட்டை - 14,232
கள்ளக்குறிச்சி - 13,037
நாகப்பட்டினம் - 14,444
தென்காசி - 12,518
நீலகிரி - 10,217
கிருஷ்ணகிரி - 16,200
திருப்பத்தூர் - 10,593
சிவகங்கை - 9,058
தருமபுரி - 10,268
ராமநாதபுரம் - 9,089
கரூர் - 8,485
அரியலூர் - 5,772
பெரம்பலூர் - 2,776
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,001
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,074
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க : தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் முக்கிய ஆலோசனை!