தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 19, 2019, 3:16 AM IST

ETV Bharat / state

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி மக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் - காவல் துறை!

சென்னை: பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பொது மக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

cop-press-release
cop-press-release

சென்னையில் குழந்தை, பெண்கள் பாதுகாப்பில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்களைத் தடுக்க காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி, அம்மா பேட்ரோல் வாகனம் ஆகியவற்றை காவல் துறை அறிமுகம் செய்தனர்.

இதன் ஒரு கட்டமாக தற்போது பெண்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த பொதுமக்களின் உதவியை காவல் துறை நாடுகின்றனர். சென்னை நகரில் ஏதேனும் இடங்களிலோ, நபர்களாலோ பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று பொது மக்கள் கருதினால், அவர்களின் பாதுகாப்பு கருதி அஞ்சலிலோ, வாட்ஸ்அப்பில்லோ, இ -மெயில் மூலமாக தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details