சென்னை திருவெற்றியூர் கரிமேடு தெரு அருகே மத்திய அரசுக்கு சொந்தமான கான்கார்ட் யார்டு என்ற கன்டெய்னர் சரக்கு பெட்டகம் உள்ளது.
இங்கு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யக்கூடிய கன்டெய்னர்கள் கொண்டு வரப்படுகின்றன.
இந்த கன்டெய்னர் பெட்டிகளை கையாளும் பணியில் ராட்சத கன்டெய்னர் பெட்டி தூக்கும் மெஷின் ஆபரேட்டர்கள், உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், கூலித் தொழிலாளர்கள் என ஏராளமானோர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கண்டனர் பெட்டிகளை கையாளும் பணிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் ஏற்கனவே பணி செய்து கொண்டிருந்த ஒப்பந்ததாரர்களுக்கு பதிலாக புதிய ஒப்பந்ததாரர்களை பணியில் ஈடுபடுத்தியதாகத் தெரிகிறது.