தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிலவரம்: சென்னையில் அதிகரித்து வரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்! - containment zones in Chennai increasing day by day

சென்னை: கரோனா பெருந்தொற்றால், சென்னையில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை, 690ஆக உயர்ந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை
சென்னை

By

Published : May 12, 2020, 5:52 PM IST

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ள போதிலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா பெருந்தொற்று பரவல் தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதுவரை, சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. இந்நிலையில், கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகள் அமைந்திருக்கும் தெருக்களை, 'கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்' என மாநகராட்சி அறிவித்து, அவற்றைத் தடுப்புகள் அமைத்து மூடியுள்ளது.

அதன்படி, ராயபுரம் - 116 பகுதிகள், திரு.வி.க. நகர் - 124 பகுதிகள், வளசரவாக்கம் - 53 பகுதிகள், தண்டையார்பேட்டை - 52 பகுதிகள், தேனாம்பேட்டை - 78 பகுதிகள், அம்பத்தூர் - 51 பகுதிகள், அடையாறு - 23 பகுதிகள், அண்ணா நகர் - 45 பகுதிகள், பெருங்குடி - 13 பகுதிகள், கோடம்பாக்கம் - 22 பகுதிகள், திருவொற்றியூர் - 32 பகுதிகள், மாதவரம் - 24 பகுதிகள், மணலி - 33 பகுதிகள், சோழிங்கநல்லூர்- 14 பகுதிகள், ஆலந்தூர் - 10 பகுதிகள் என மொத்தம் 690 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்தப் பகுதிகள் அனைத்தும், தொடர்ந்து 28 நாட்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாகக் கண்காணிக்கப்படும். அதன் பின்னர், கரோனா பெருந்தொற்று இல்லை எனில், அப்பகுதிகளுக்குத் தளர்வு அறிவிக்கப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உயிரிழந்த ஜெயஸ்ரீயின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி - முதலமைச்சர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details