சென்னை: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று (ஏப்.11) மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி, சுகாதாரத் துறைஇணைந்து முகக்கவசம் வழங்குதல், சிறப்பு மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகிறது.