தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: மாநகராட்சி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18ஆக உயர்ந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

By

Published : Aug 18, 2020, 6:52 PM IST

கரோனா வைரஸ் தொற்றால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தொற்று பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் நடத்துவது என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டுவருகிறது.

இத்தொற்று நோய்யை தடுக்க முதலில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் முழு தெருவையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்திருந்தது. இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால், ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று இருந்தால் தெருவைத் தனிமைப்படுத்திக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது.

மேலும் தொற்று நோயால் குணமடைந்தவர்களின் விகிதம் சென்னையில் அதிகரித்து வந்ததால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 14 ஆம் தேதி 13ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், தற்போது 18ஆக உயர்ந்துள்ளது. இதன் மண்டல வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

அம்பத்தூர் - 2

அண்ணா நகர் - 1

கோடம்பாக்கம் - 1

வளசரவாக்கம் - 7

ஆலந்தூர் - 1

அடையார் - 2

பெருங்குடி - 1

சோழிங்கநல்லூர் - 3

ABOUT THE AUTHOR

...view details