சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியன் என்பவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது அலுவலகத்தில் மட்டும் 89 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்த சோதனையில், ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் ரொக்கமும் மூன்று கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாது 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்களும் ஒரு நான்கு சக்கர வாகனமும் மற்றும் 3 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுற்றுச்சூழல் துறையில் இருபது வருடங்களாக பணிபுரிந்துவரும் பாண்டியன், தற்போது தமிழக கடலோரப் பகுதிகளில், வனப்பகுதிகளில் நடைபெறும் கட்டுமானம், தொழிற்சாலைகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்குவதில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாகத் தெரியவந்துள்ளது. இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி அளிப்பதில் பல இந்திய வனத்துறை அலுவலர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் ஆறு துணை நடிகைகளுடன் அந்தமானில் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.