தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

25 கோயில்களில் இம்மாதம் குடமுழுக்கு - இந்து சமய அறநிலையத் துறை - இந்து அறநிலையத்துறையால் குடமுழுக்கு

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 25 திருக்கோயில்களில் இம்மாதம் குடமுழுக்கு நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

25 கோயில்களில் இம்மாதம் குடமுழுக்கு நடைபெறும் - இந்து சமய அறநிலைத்துறை
25 கோயில்களில் இம்மாதம் குடமுழுக்கு நடைபெறும் - இந்து சமய அறநிலைத்துறை

By

Published : Feb 2, 2022, 1:45 PM IST

கும்பகோணம்:திருநாகஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம் லாகடம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கொங்குநாச்சி அம்மன் திருக்கோயில், சென்னை மாவட்டம் வடபழனி ஆண்டவர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம் பூதநாரயணபெருமாள் திருக்கோயில் உள்பட்ட ஐம்பது திருக்கோயிலில் கடந்த ஐந்து மாதங்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

பல்வேறு கோயில்களில் குடமுழுக்கு

​தற்போது திருச்சி மாவட்டம் இலால்குடி சீனிவாச வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி திருவழுதீஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி செல்லப்பர் வகையறா திருக்கோயில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் விஸ்வநாதசுவாமி திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வளரொளீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றாங்கரை ஆனந்த வல்லியம்மன் திருக்கோயில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கரியகாளியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

பாபநாசம் தாமோதர வினாயகர் என்ற இரட்டைப் பிள்ளையார் திருக்கோயில், கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணபுரம் முத்தாரம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்தாலம்மன் திருக்கோயில் ஆகிய கோயில்களில் வருகின்ற 6 அன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது.

25-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு

மேலும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சீனிவாச பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலந்தூர் வீரனார் மற்றும் அய்யனார் திருக்கோயிலில் வரும் 11 அன்றும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் தட்டாரப்பட்டு தேவி குங்குமக்காளியம்மன் திருக்கோயிலில் வரும் 7 அன்றும்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் பெரியகண்டியாங்குப்பம் வெண்மலையப்பர் திருக்கோயில், பெரம்பலூர் மாவட்டம் நொச்சியம் இலட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் வரும் 11 அன்றும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை செம்பாளுர் கல்யான சுந்தரியம்மன் திருக்கோயிலில் வரும் 20ஆம் தேதியன்றும், 25-க்கும் மேற்பட்ட இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் திருக்குடமுழுக்கு நன்நீராட்டு விழா இம்மாதம் சிறப்பாக நடைபெற இருக்கின்றது.

இதையும் படிங்க:தேர்தல் பணி; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details