சென்னை: செய்தி மற்றும் விளம்பரத் துறை, கைத்தறி, பத்திரப்பதிவுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 6) நடைபெற்றது.
விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா, பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த முதலமைச்சருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
அண்ணா பெயர் குறிப்பிடவில்லை
தொடர்ந்து பேசிய அவர், " ஓமந்தூர் ராமசாமி, காமராஜர், கருணாநிதி ஆகியோர் இருந்த இந்த அவையில் நானும் இருப்பதில் பெருமை அடைகிறேன். பருத்தி விற்பனையில் வாடிக்கையாளர்களின் மானியத் தொகை தள்ளுபடி ஒரே மாதிரியாக நடைமுறையில் உள்ளது.
உதாரணத்திற்கு 500 ரூபாய்க்கு பருத்தி வாங்கும் வாடிக்கையாளருக்கும் 1500 ரூபாய்க்கு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் மானிய தள்ளுபடி 100 ரூபாய் என்ற அளவில் உள்ளது. அதனை மாற்றி விற்பனை தொகைக்கு ஏற்றவாறு மானிய தள்ளுபடி தொகையையும் மாற்றி அமைத்து விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்" என வலியுறுத்துகிறேன்.
விவாதம்