தமிழ்நாடு

tamil nadu

கடத்தப்பட்ட குழந்தையை மீட்க உதவிய செவிலிக்கு பாராட்டு!

By

Published : Jan 21, 2020, 6:31 PM IST

சென்னை: சினிமாவில் நடிக்கவைப்பதாகக் கூறி கடத்தப்பட்ட குழந்தையை மீட்க உதவிய செவிலிக்கு காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

chennai
chennai

சென்னை மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்துவருபவர் ரந்தோஷ். அவரது மனைவி போஸ்லே. இவர்களின் ஏழு மாத ஆண் குழந்தையை சினிமாவில் நடிக்கவைப்பதாகக் கூறிய பெண் ஒருவர், அவர்களை கடந்த 12ஆம் தேதி ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு வரவழைத்து அங்கிருந்து குழந்தையை கடத்திச்சென்றார்.

செவிலியர் ஜூலியட்

அதைத்தொடர்ந்து குழந்தையை கடத்திய பெண்ணைப் பற்றி எழும்பூர் மருத்துவமனை செவிலி ஜூலியட் அளித்த தகவலின்பேரில் குழந்தை தீவிரமாகத் தேடப்பட்டுவந்தது. அதையடுத்து எட்டு நாள்களுக்குப் பின் எழும்பூர் மருத்துவமனை வளாகத்தில் கடத்திய பெண் கைதுசெய்யப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது. கடத்திய பெண்ணின் பெயர் தேவி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குழந்தையை கடத்திச்சென்ற பெண்ணைப் பற்றி தகவலளித்த செவிலி ஜூலியட்டை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

மீட்கப்பட்ட குழந்தையுடன் தாய், தந்தையர்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜூலியட் கூறுகையில், 'கடந்த 14ஆம் தேதியன்று எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையின் நான்காவது மாடியில் சந்தேகத்திற்கிடமாகக் கையில் குழந்தையுடன் பெண் ஒருவர் சுற்றித்திரிவதை நான் பார்த்தேன். சந்தேகப்பட்டு அவரிடம் பேசியபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார்' என்றார்.

கடந்த 18ஆம் தேதி குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படம், சிசிடிவி காட்சியை காண்பித்தபோது அதைப்பற்றி காவலர்களிடம் கூறியதையும் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்த பெண்ணை ரோந்துப் பணியிலிருந்த காவலர் விசாரிக்கையில் அவர் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சினிமாவில் நடிக்கவைப்பதாக ஆசைவார்த்தைக் கூறி குழந்தையை கடத்திய பெண்!

ABOUT THE AUTHOR

...view details