சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு வளைகுடா நாட்டிலிருந்து வந்த சரக்கு விமானத்தில், மருத்துவ உபகரணங்கள் பெருமளவு வந்திருந்தன. கரோனா நெருக்கடி காரணமாக, மருத்துவ உபகரணங்களை சுங்கச் சோதனை முடித்து விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என்ற விதிமுறையுள்ளது.
இதனால், சுங்க அலுவலர்கள் பார்சல்களை விரைந்து ஆய்வு செய்தனா். அப்போது, மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில் 6 பார்சல்கள் அபுதாபியிலிருந்து, தூத்துக்குடி மாவட்ட முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்தப் பார்சல்களை பிரித்து பார்த்த சுங்கத் துறையினர், 63 பண்டல்களில் விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்ததை கண்டறிந்தனர்.