தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 1, 2020, 4:10 PM IST

ETV Bharat / state

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: கட்சித் தலைவர்கள் இரங்கல்

தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Condolence from All party Leaders for minister Duraikkannu death
Condolence from All party Leaders for minister Duraikkannu death

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு நீண்ட நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் நேற்று இரவு மறைந்தார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. தொகுதி மக்களுடன் நன் மதிப்பை பெற்ற துரைக்கண்ணு விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டவர். அவர் மீண்டு வந்துவிடுவார் என்று நாம் பிரார்த்தித்தோம். ஆனால் நம்மை விட்டு மறைந்துவிட்டார் .

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தனது பேஸ்புக் பதிவில், "வேளாண் துறை அமைச்சராக , பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினராக , சிறப்பாகவும் , எளிமையாகவும் மக்களுடைய பிரச்னைகளை தீர்க்க கூடியவராக செயல்பட்ட துரைக்கண்ணுவின் மறைவு தஞ்சை மாவட்டத்திற்கும் , அதிமுகவிற்கும் பேரிழப்பாகும் .

புரட்சி தலைவியின் நம்பிக்கையைப் பெற்று அவர்களது அமைச்சரவையில் செயல்பட்டவர் . தொடர்ந்து முதலமைச்சரோடும் , துணை முதலமைச்சரோடும் துணை நின்று அமைச்சரவையில் நம்பிக்கைக்குரியவராக பணியாற்றியவர்.

மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் குடும்பத்தோடு மிகுந்த மரியாதை கலந்த அன்போடு பழகியவர். அமைச்சரானாலும் , மக்களோடு மக்களாக எளிமையாக பழகியவர் என்று பெயரெடுத்த அமைச்சர் துரைக்கண்ணு மறைவால் , அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , அதிமுகவினருக்கும் , தொகுதி மக்களுக்கும் த.மா.கா. சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

திமுக மகளிரணிச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கரோனாவால் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details