வேலூர் ஆயுதப்படை காவலரான சிவக்குமார், 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக உறுதியளித்து பலமுறை வெளியில் அழைத்துச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகவும், பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்ததாகவும் 2005ஆம் ஆண்டு இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதை விசாரித்த வேலூர் ஆயுதப்படை டி.எஸ்.பி, பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை என்றும், ஏமாற்றியது மட்டும் நிரூபணமாகியிருப்பதாக அறிக்கை அளித்தார்.
இந்த அறிக்கையை ஏற்க மறுத்த வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர், காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம்சிவக்குமாருக்கு கட்டாய ஓய்வு அளித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உறுதி செய்ததை எதிர்த்து, சிவக்குமார் மேல் முறையீடு செய்தார்.