தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 26, 2022, 7:11 AM IST

ETV Bharat / state

சின்னத்திரை நடிகைக்கு பாலியல் தொல்லை - இயக்குநர் மீது டிஜிபி-யிடம் புகார்

சினிமா இயக்குனர் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி சித்தரவதை செய்வதாக சின்னத்திரை நடிகை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இயக்குநர் மீது புகார்
இயக்குநர் மீது புகார்

சென்னை:பன்னாட்டு பெண்கள் அமைப்பின் நிறுவனர் செங்கோடி பாலகிருட்டிணன், சின்னத்திரை நடிகைக்கு நடந்த சித்தரவதை குறித்து அந்த நடிகை சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதன் பின்னர், செய்தியாளரைச் சந்தித்த அவர், “சின்னத்திரை துணை நடிகைக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ள நிலையில் இவருக்கும் இயக்குநர் ராஜாதேசிங்கு சுப்பிரமணிக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் ஒரு நாள் இயக்குநர் ராஜதேசிங்கு சினிமாவில் ஒத்துழைத்தால் மட்டுமே நல்ல நிலைமைக்கு வரமுடியும் என நடிகையிடம் தெரிவித்ததுடன் தன்னுடன் இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறு கேட்டுள்ளார்.

இதனை நம்பிய நடிகை, ராஜாதேசிங்கு மணியிடம் ரூ.5 லட்சம் கொடுத்ததாகவும், அந்த பணத்தில் இளமை இதோ இதோ படத்தை தொடங்கியதாகவும் நாளடைவில் நடிகையை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி இயக்குநர் கோயிலுக்கு அழைத்துச் சென்று தாலி கட்டி இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

பின்னர் இயக்குநர் திடீரென நடிகையை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காததால் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். ராஜா குறித்து நடிகை விசாரித்த போது ஏற்கனவே சிறுமியை 100 நாள்கள் அடைத்துவைத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக புழல் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

இயக்குநர் மீது புகார்

உடனே பாதிக்கப்பட்ட நடிகை இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இயக்குநர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தற்போது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகவே இருப்பதாகவும், இயக்குநர் ராஜா தேசிங்கு மீது அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் செங்கோடி பாலகிருட்டிணன் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:கேரள ஊடகவியலாளர் பெங்களூருவில் தற்கொலை... கணவர் டார்ச்சர் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details