சென்னை:சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டும் காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 16) புகார் அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முத்தியால்பேட்டை காவல் நிலையம் எதிரே சொந்தமாக கூரியர் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனது மனைவி ரூபாவதியும் அடிக்கடி கூரியர் நிறுவனத்திற்கு வந்து செல்வார். அப்போது முத்தியால்பேட்டை காவல் நிலைய ஓட்டுநர் பெஞ்சமின் பிராங்கினுடன், ரூபாவதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தற்கொலை முயற்சியால் வெளிவந்த உண்மை
பின்னர் இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் ரூபாவதியிடம் இருந்து ரூ.3 லட்சம், 3 சவரன் தங்க நகைகள் ஆகியவற்றை பெஞ்சமின் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் ரூபாவதி திடீரென தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரிடம் நான் விசாரித்தபோது, கடந்த 1 வருடமாக பெஞ்சமினுடனான உறவு குறித்து அவர் தெரிவித்தார்.
ஆபாசக் காணொலிகளை வெளியிடுவதாக மிரட்டல்