தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெரினாவில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்கள்: ரூ.15,700 அபராதம் வசூல் - சென்னை மாவட்ட செய்திகள்

மெரினா கடற்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.15,700 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்கள்
மெரினாவில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்கள்

By

Published : Aug 8, 2022, 10:44 PM IST

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் 5 தேதி முதல் மாநகராட்சியின் சார்பின் கடற்கரை பகுதிகளில் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இருவேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் 5 தேதி முதல் 8 தேதி வரை 4 நாட்களில் 1391 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் கடை உரிமையாளர்களிடமிருந்து 71 கி.கி. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.15,700 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அரசு முதன்மை செயலாளர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திருககன்தீப் சிங் பேடி, இன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிளாஸ்டிக் தடுப்பு மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், கடற்கரையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மண்டல அலுவலரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது துணை மேயர் மு.மகேஷ் குமார் உடன் இருந்தார்.

இதையும் படிங்க:தருமபுரம் ஆதீனத்தின் முன்பு யோகாசனம் செய்து காட்டிய மாணவ, மாணவிகள்

ABOUT THE AUTHOR

...view details