தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 26, 2019, 2:08 PM IST

ETV Bharat / state

நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி!

கோதாவரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

CM

கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி இருந்தார். இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்பதால் கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் மிகவும் முக்கியமானது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்ட அறிவிப்புக்கு மனமார்ந்த நன்றி. இந்த நேரத்தில் இது முக்கியமான திட்டமாகும். மேலும், இது தமிழ்நாட்டின் நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

கட்கரிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details