தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 8, 2022, 3:37 PM IST

ETV Bharat / state

கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.150.89 கோடி ஊக்கத்தொகை

சர்க்கரை ஆலைகளுக்கு 2020-2021 அரவைப் பருவத்திற்கு கரும்பு வழங்கிய பதிவுபெற்ற விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.150.89 கோடி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ரூ. 150.89 கோடி ஊக்கத்தொகை
கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ரூ. 150.89 கோடி ஊக்கத்தொகை

சென்னை:சர்க்கரை ஆலைகளுக்கு 2020-2021 அரவைப் பருவத்திற்குக் கரும்பு வழங்கிய பதிவு பெற்ற விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ. 150.89 கோடி வழங்கும் திட்டத்தை ஐந்து கரும்பு விவசாயிகளுக்கு வழங்கி தமிழ்நாடு மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில்தொடங்கிவைத்தார்.

மத்திய அரசு ஆண்டுதோறும் கரும்புக்கு நியாயமான, ஆதாய விலையை நிர்ணயம் செய்துவருகிறது. கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும்பொருட்டு, மதத்திய அரசு நிர்ணயிக்கும் விலைக்கு மேல் கூடுதலாகத் தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்கிவருகிறது.

மத்திய அரசின் ஊக்கத் தொகை

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை தனி நிதிநிலை அறிக்கை 2021-2022 அறிவிப்பின்படி, கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.42.50/-, சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ. 150/-, என மொத்தம் ரூ. 192.50/- தமிழ்நாடு அரசால், மத்திய அரசின் நியாயமான, ஆதாய விலையான ரூ. 2,707.50-யை விட டன் ஒன்றிற்குக் கூடுதலாக வழங்கப்படுகிறது.

இதன்படி 2020-21ஆம் அரவைப்பருவத்திற்குச் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய பதிவுபெற்ற விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு ரூ.2,900/- கிடைக்கப்பெறுகிறது.

இதனடிப்படையில் தமிழ்நாடு அரசால் 2020-2021 அரவைப்பருவத்தில் இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், 15 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 17 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 78 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு வழங்கிய, தகுதியுடைய 91 ஆயிரத்து 120 விவசாயிகளுக்குக் கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத்தொகையாக, மொத்தம் ரூபாய் 150 கோடியே 89 இலட்சம் வழங்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் வெ. இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'நீட் விலக்கு; ஆளுநர் ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம்'

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details