தமிழ்நாடு

tamil nadu

10 கோரிக்கைகளை 15 நாள்களில் பட்டியலிட்டு அனுப்ப அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதலமைச்சர் கடிதம்

சட்டப்பேரவை தொகுதிகளில் தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகள் அடங்கிய பரிந்துரை பட்டியலை 15 நாள்களுக்குள் அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

By

Published : Aug 23, 2022, 1:05 PM IST

Published : Aug 23, 2022, 1:05 PM IST

ETV Bharat / state

10 கோரிக்கைகளை 15 நாள்களில் பட்டியலிட்டு அனுப்ப அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதலமைச்சர் கடிதம்

தொகுதிகளில் தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை பட்டியலிட்டு அனுப்ப வேண்டும்... எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் உத்தரவு
தொகுதிகளில் தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை பட்டியலிட்டு அனுப்ப வேண்டும்... எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் உத்தரவு

சென்னை:'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம் விரிவுபடுத்தப்படுவது குறித்த முக்கியமான அறிவிப்பினை முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்காக இந்த ஆண்டே 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படி தங்கள் தொகுதியில் நீண்ட நாள்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குப் பரிந்துரைப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சட்டப்பேரவை உறுப்பினர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில்,"சட்டப்பேரவை உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நமது பங்களிப்பினை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அந்த வகையில், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அவர்களது பிரதிநிதிகளாக விளங்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகிய நமக்கு உள்ளது.

குறிப்பாக, சில தேவைகள் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தும், நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றைச் செயல்படுத்திட இயலாத நிலை இருக்கலாம். மக்களின் இன்றியமையாத தேவையின் அடிப்படையிலான அத்தகைய திட்டங்களுக்கான பணிகளை நிறைவேற்றிடத் திட்ட அறிக்கை தயாரித்து அரசு அளவில் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெற வேண்டிய அவசியமும் இருக்கலாம்.

குறிப்பாக குடிநீர் மற்றும் நீர் ஆதாரத்தை மேம்படுத்தக் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள், வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்குரிய பணிகள், இணைப்புப் பாலங்கள் மற்றும் சாலைகள், மருத்துவ வசதிகள், பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ போன்ற புதிய கல்வி நிறுவனங்கள் அல்லது தற்போதுள்ள கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் உட்கட்டமைப்புப் பணிகள் போன்றவைகளை பரிந்துரைக்கலாம்.

தொழில் வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய வசதிகள், மின் மயானம், நவீன நூலகம் நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் புதிய சுற்றுலாத் தளங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணிகள் போன்ற சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை நீங்கள் பரிந்துரைக்கலாம்" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:காலணிகள் மற்றும் தோல்துறை மாநாடு... தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details