சென்னை: மாற்றுத்திறனாளிக்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாகத் திருமணம் நடத்தும் திட்டம் தொடங்கிவைத்தார்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிக்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாகத் திருமணம் நடத்தும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் விதமாகச் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் திருமணம் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி மணமகன் மற்றும் மணமகளுக்கு, திருக்கோயிலில் திருமணம் செய்திடக் கட்டணம் இல்லை என்ற உத்தரவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருமணம் செய்திடக் கட்டணம் இல்லை
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், மணமக்களின் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்குக்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும் , திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக