தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்களில் இலவச திருமணம்: மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் அன்பு பரிசு - மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் அன்பு பரிசு

மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாகத் திருமணம் நடத்தும் திட்டத்தைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணம்
மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணம்

By

Published : Dec 9, 2021, 10:00 AM IST

சென்னை: மாற்றுத்திறனாளிக்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாகத் திருமணம் நடத்தும் திட்டம் தொடங்கிவைத்தார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிக்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாகத் திருமணம் நடத்தும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் விதமாகச் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் திருமணம் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி மணமகன் மற்றும் மணமகளுக்கு, திருக்கோயிலில் திருமணம் செய்திடக் கட்டணம் இல்லை என்ற உத்தரவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

திருமணம் செய்திடக் கட்டணம் இல்லை

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், மணமக்களின் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்குக்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும் , திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணம்

அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக

அதன்படி, இந்த அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி திருமணத்திற்கு மணமகன் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் மணமகள் எஸ். மோனிஷா ஆகியோருக்கு திருக்கோயிலில் திருமணம் செய்திடக் கட்டணம் இல்லை என்ற உத்தரவினை முதலமைச்சர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணம்

இலவசமாகத் திருமணம் நடத்தும் திட்டம்

மேலும், மணமக்களுக்குத் திருமண வாழ்த்துகளுடன் பரிசுப் பொருள்களையும் வழங்கி வாழ்த்தினார். இத்திட்டத்தைத் தொடங்கி வைத்ததன் மூலம், இனிவரும் காலங்களில் திருமணம் நடத்தவிருக்கும் மாற்றுத்திறனாளிக்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாகத் திருமணம் நடத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணம்

இந்த நிகழ்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அடுத்த முப்படை தலைமை தளபதி யார்?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details