தமிழ்நாடு

tamil nadu

கூடுதல் மின் பளுவைத் தவிர்க்க ரூ.625 கோடி மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள்

தமிழ்நாட்டில் கூடுதல் மின் பளு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தைத் தவிர்க்க, ரூ.625 கோடி மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

By

Published : Aug 29, 2021, 8:04 PM IST

Published : Aug 29, 2021, 8:04 PM IST

8,905 புதிய மின்மாற்றிகள்
8,905 புதிய மின்மாற்றிகள்

சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.29) கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம். காலனியில் உள்ள விளையாட்டுத் திடலில் மின் பளு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தைத் தவிர்க்க 625 கோடி ரூபாய் மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

மேலும் லோகோ செட் காந்தி நகர், ஜி.கே.எம். காலனி 25, 30 ஆவது தெரு, வி.வி.நகர் 2 ஆவது தெரு, பூம்புகார் நகர் 1 ஆவது மெயின் ரோடு மற்றும் யுனைடெட் காலனி 2 ஆவது தெரு ஆகிய ஆறு இடங்களில் வளைய சுற்றுத்தர அமைப்புடன் கூடிய மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து முதலமைச்சர் அதனை இயக்கி வைத்தார்.

சீரான மின் விநியோகம் செய்ய கள ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் செய்ய கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், சில மின்மாற்றிகளில் அதிக மின்பளுவும், சில மின்மாற்றிகளில் கடைமுனைப் பகுதிகளில் உச்ச நேரங்களில் குறைந்த மின்னழுத்த குறைபாடும் ஏற்படுகிறது.

சில இடங்களில் மின்பாதைகளின் நீளம் அதிகமாக உள்ளதாலும், பல நுகர்வோர்கள் அந்த மின்பாதையில் ஒரே நேரத்தில் மின்சாதனங்களைப் பயன்படுத்துவதாலும் கடைமுனை மின்நுகர்வோருக்கு குறைந்த மின்னழுத்த குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

4 மாதங்களில் பணிகளை முடிக்க அறிவுறுத்தல்

மேற்கண்ட குறைபாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, அனைத்து மின்பகிர்மான வட்டங்களிலும் மின்பளுவை குறைப்பதற்கு 5,705 கூடுதல் மின்மாற்றிகள், குறைந்த மின்னழுத்தத்தை சீர்செய்ய 3,200 கூடுதல் மின்மாற்றிகள் என மொத்தம் 8,905 மின்மாற்றிகள் அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. இந்தப் பணிகளை நான்கு மாதங்களில் முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அந்தந்த இடத்திற்கு ஏற்றார்போல் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் மின்பளுக்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் மின்மாற்றியின் சுமை குறைக்கப்பட்டு, அனைத்து நுகர்வோர்களுக்கும் சீரான மின்னழுத்தத்தில் மின் விநியோகம் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியின் போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சென்னை வீட்டு உரிமையாளர்களுக்கு புது உத்தரவு வெளியிட்ட காவல் ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details