தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 22, 2022, 7:39 PM IST

ETV Bharat / state

திமுக அதிமுக இடையே தள்ளுமுள்ளு: தாம்பரத்தில் பரபரப்பு

தாம்பரத்தில் வாக்கு எண்ணிகையில் முறைகேடு உள்ளதாகக் கூறி திமுக, அதிமுக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

urban local election urban local election 2022 urban local election result clashes between dmk and admk dmk and admk clashes in vote counting process clash between admk and dmk in thambaram நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் திமுக அதிமுக இடையே தள்ளு முள்ளு தாம்பரத்தில் திமுக அதிமுக இடையே தள்ளு முள்ளு
திமுக அதிமுக இடையே தள்ளு முள்ளு

சென்னை:தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் வாக்கு எண்ணிக்கையின்போது 47ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் சாய் கணேஷ், 31 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அதே வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.கே. பாலாஜி, அவரது ஆதரவாளர்கள் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு இருப்பதால் வெற்றி அறிவிப்பை நிறுத்திவைக்குமாறும், தேர்தல் அலுவலரான இளங்கோவிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக அதிமுக இடையே தள்ளுமுள்ளு

அப்போது அதே அறையில் இருந்த அதிமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டதால், இரு தரப்பினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அறையிலிருந்து வெளியேற்றினர்.

இதையும் படிங்க: வாகை சூடிய கோட்சே சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர்!

ABOUT THE AUTHOR

...view details