தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 12, 2020, 11:48 AM IST

ETV Bharat / state

தேவாலயத்தில் அரங்கேறிய கிறிஸ்தவ ஊழியர் கொலை!

சென்னை: கிறிஸ்தவ ஊழியர் ஆலயத்தில், கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துவ ஊழியர் ஈனேஷ்
கிறிஸ்துவ ஊழியர் ஈனேஷ்

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஈனேஷ் (62). மத்திய பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சிவிஆர்டியில் பணியாற்றிவருகிறார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இவர் பட்டாபிராம், வள்ளலார் நகரில் உள்ள பெந்தேகோஸ்து தேவாலயத்தில் ஊழியம் செய்துவருகிறார்.

இந்த நிலையில் தேவாலயத்தில் இரவு லைட் போடச்சென்ற ஈனேஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது நண்பர்கள் தேவாலயம் சென்று பார்த்தபோது, ஈனேஷ் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். உடனடியாக அவர்கள் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆவடியில் கிறிஸ்துவ ஊழியர் கொலை

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தேவாலயத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வுசெய்தனர். அதில், அதே தேவாலயத்திற்கு வரும் மோசஸ் (29) என்பவர், ஈனேஷை கத்தியால் மூன்றுமுறை நெஞ்சில் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து மோசஸை கைதுசெய்த காவல் துறையினர் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், கைதுசெய்யப்பட்ட மோசஸ் மீது, சத்தியவேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கும், பட்டாபிராம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இதையும் படிங்க:குடிபோதையில் பாட்டியை தாக்கிய பேரன்!

ABOUT THE AUTHOR

...view details