சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவரான பன்னீர்செல்வம் (47) ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சவாரிக்காக சென்ற பன்னீர்செல்வம் இரவு வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மனைவி ரகிமா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பன்னீர்செல்வத்தை காவல் துறையினர் தேடிவந்த நிலையில் கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள கால்வாயில் மர்மமான முறையில் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் வந்தது.