தமிழ்நாடு

tamil nadu

இலங்கை கடற்படை கைது செய்த 15 மீனவர்களை விடுதலை செய்ய முதலமைச்சர் கடிதம்

By

Published : Nov 7, 2022, 10:52 PM IST

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படை கைது செய்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய முதலமைச்சர் கடிதம்
இலங்கை கடற்படை கைது செய்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய முதலமைச்சர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய 2 விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 5.11.2022 அன்று கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவர்களது இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்தும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் இன்று (7-11-2022) கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், பாக்ஜல சந்திப்பில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்வதாகவும், இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியைச் நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் உதவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'அவுட்சோர்சிங்' முறையால் திமுக அரசு 'அவுட்' ஆகும் - ஓபிஎஸ் காட்டம்

ABOUT THE AUTHOR

...view details