தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்தா கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் - சித்தா கரோனா சிகிச்சை மையம்

சென்னை: மீனம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்தா கரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

Stalin
Stalin

By

Published : May 11, 2021, 8:37 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு பெரும்பாலானோர் சித்த வைத்திய சிகிச்சை முறையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தனர்.

இந்நிலையில், மீண்டும் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி போன்ற சிகிச்சை மையங்களை விரிவுப்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் ஒரு மாதத்துக்குள் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சித்தா கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

அந்த வகையில், சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட சித்தா கரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மே.11) திறந்து வைத்தார். மேலும் கரோனா சிகிச்சை மையத்தை முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதையும் அவர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது முதலமைச்சருடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் தாமோதரன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details