சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜுன்.6) காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'அனைத்தும் சாத்தியம்' என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை அவர் திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறப்பு மேலும் அவர், மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையும் படிங்க:இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக முதலமைச்சர் ஸ்டாலின் விளங்குகிறார்- அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்