சென்னை : அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(மே.31) இரவு 10 மணியளவில் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் ஜப்பான் ஆகிய நாடுகளில் 9 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டதில் சுமார் ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்துகிறது. இந்த மாநாட்டில் உலக முதலீட்டாளர்களை பங்கேற்க வைத்து, புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 9 நாட்கள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றார்.