சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்.22) டிஜிபி அலுவலகத்திற்கு வருகை புரிந்து ‘உங்கள் துறையில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் காவலர்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். பின்னர் சுற்றுசூழல் நலனை முன்னிறுத்தும் விதமாக டிஜிபி அலுவலகத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார். இதனையடுத்து, டிஜிபி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து எழுதியுள்ளார்.
அந்த பதிவேட்டில், தமிழ்நாடு காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு வந்து காவல் துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தது, தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருவதாக முதலமைச்சர் தன்னுடைய வாழ்த்துகளை காவல்துறை பதிவேட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.