தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறுதி வாக்காளர் பட்டியல் : மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அலுவலர் ஆலோசனை - மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அலுவலர் ஆலோசனை

சென்னை: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

satya pratha sahoo
satya pratha sahoo

By

Published : Jan 7, 2021, 5:29 PM IST

ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் இன்று (ஜன.7) தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த நவம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் நடந்த சிறப்பு வாக்காளர் முகாமில் பெயர் சேர்ப்பு, நீக்குதல், முகவரி மாற்றம் என 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்தும் நிலை குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், வாக்கு இயந்திரம் மற்றும் விவிபெட் வைக்கும் கிடங்கும் தற்போது 7 மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளன. மற்ற 31 மாவட்டங்களில் புதிய திட்டங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த பணிகள் குறித்தும் தலைமை தேர்தல் அலுவலர் கேட்டறிந்தார். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடி அதிரிக்கக் கூடும் என தகவல் வெளியான நிலையில், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்யபால் மறைவு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details