தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் லோன் கட்ட சொந்த வீட்டில் திருடிய இளம்பெண் கைது - woman arrested stealing jewels her home

ஆன்லைன் லோன் செயலி மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த சொந்த வீட்டிலேயே நகையை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

ஆன்லைன் லோன் வாங்கியதால்  சந்தியாவிடம் ஆன்லைன் செயலி மூலமாக தொந்தரவு செய்து வந்துள்ளனர்
ஆன்லைன் லோன் வாங்கியதால் சந்தியாவிடம் ஆன்லைன் செயலி மூலமாக தொந்தரவு செய்து வந்துள்ளனர்

By

Published : Apr 30, 2022, 4:27 PM IST

சென்னை: டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தேவி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் சந்தியா என்ற மகள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வேலையை விட்டு நின்றுள்ளார். இதுகுறித்து தாயார் தேவிக்கு சொல்லாமல் மறைத்து வந்தார். அதோடு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வீட்டிலிருந்தே வேலை செய்வதாக தெரிவித்துள்ளார்

மூன்று மாதம் கழித்து குறித்து தாய் தேவி சந்தியாவிடம் சம்பளம்குறித்து கேட்டுள்ளார். இதனால் சந்தியா ஆன்லைன் லோன் செயலி மூலம் 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று, தாயிடம் கொடுத்தார். இதையடுத்து கடன் தொகையை கட்டுமாறு ஆன்லைன் லோன் செயலி நிறுவனத்தினர் சந்தியாவிடம் கேட்டுள்ளனர். இதற்காக சந்தியா வீட்டில் இருந்த 12 சவரன் நகையை திருடி, அதன் மூலமாக லோன் கட்டினார்.

அதுமட்டுமல்லாமல் வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். இதனால் தேவி டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து டிபி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, சந்தியா 5 சவரன் நகையை அடகு கடையில் வைத்து, கடனை கட்டியதும், மீதமுள்ள 7 சவரன் நகையை வீட்டிலேயே வேறு இடத்தில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:வேனில் வைத்திருந்த 264 பவுன் நகை திருட்டு

ABOUT THE AUTHOR

...view details