சென்னையைச் சேர்ந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் மீது, வழக்கறிஞர் பகவத்சிங் கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு உட்பட 7 கொலை வழக்குகளும், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தலைமறைவாக இருந்துவந்த அவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புளியந்தோப்பு காவல் துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
பின்னர், பிணையில் வெளிவந்த ஆற்காடு சுரேஷ், முறையாக காவல் நிலையத்தில் கையெழுத்திடாமலும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமலும் தலைமறைவாக இருந்ததாலும், புளியந்தோப்பு காவல் துறையினர் அவரைத்தேடி வந்தனர்.