தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞரை தாக்கி செல்போன் பறிப்பு - வெளியான சிசிடிவி காட்சிகள்! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: மாங்காடு அருகே நடந்துச் சென்ற இளைஞரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கி செல்போன் பறித்து சென்றது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

chennai-robbery-case
chennai-robbery-case

By

Published : Oct 24, 2020, 2:02 PM IST

மாங்காடு அடுத்த லட்சுமிபுரம் சாலையில் செல்போனில் பேசியபடி இளைஞர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் அந்த இளைஞரை பின் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கல்லை எடுத்து தாக்க முயன்றார்.

இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரும் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது செல்போனை பறித்துச் சென்றனர். முன்னதாக, சாலையோரம் இருந்த கற்களை நான்கு பேரும் கைகளில் எடுத்துக் கொண்டு வருவது போன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

எனவே இந்த நபர்கள் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவோரா? அல்லது முன்விரோதம் காரணமாக அந்த இளைஞரை தாக்கினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.16 லட்சத்திற்கான இழப்பீடு ஆணையை வழங்கிய நீதிபதி!

ABOUT THE AUTHOR

...view details