தமிழ்நாடு

tamil nadu

தலைமை செயலகத்துக்கு அருகே பொதுமக்கள் முகக் கவசமின்றி நடைப்பயிற்சி!

By

Published : Jun 6, 2020, 12:26 PM IST

சென்னை : பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவில் கட்டுப்பாட்டை மீறும் வகையில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai
chennai

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு தளர்வுகளை மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இருப்பினும் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வரும்போது கட்டாயமாக முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு மாறாக சென்னை தலைமை செயலகத்துக்கு எதிரே உள்ள பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவில் பொதுமக்கள் பலர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

இவர்கள் அரசின் உத்தரவான முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது என எதையும் பின்பற்றாமல் பொதுவெளியில் நடைபயிற்சி மேற்கொள்வதால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, சென்னையில் கரோனா தாக்கம் அதிவேகமாக அதிகரித்துவரும் வேளையில், தலைமை செயலகத்திற்கு மிக அருகில் உள்ள இந்த பூங்காவை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : கேரளாவில் யானையோடு பழகும் குழந்தையின் வைரல் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details